எமது பிரதேச மாணவர்களை விருத்தி செய்யும் நோக்கில் எம்மால் எமது பாண்டியன்குளம் பிரதேசத்தில் முன்பள்ளி நிறுவப்பட்டு மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி,ஒழுக்கம்,நன்நடத்தை கற்பிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாது உடல்,உள ஆரோக்கியத்தை பேணும் வண்ணம் அதிக ஊட்டச்சத்துள்ள போசாக்கான உணவும் வழங்கப்படுகின்றன.
எமது மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமல்லாது விளையாட்டு,புத்தாக்கம்,கலை, ஆளுமை,தலைமைத்துவம் போன்றவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பாக 14.03.2024 இன்று எமது முன்பள்ளியில் எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களால் கூட்டம் நடாத்தப்பட்டது.
இதில் எமது முன்பள்ளி ஆசிரியர் திருமதி.சசிகலா அவர்கள்,முன்பள்ளி மாணவர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



