முல்லைத்தீீவு மாவட்ட உள்ளூராட்சிமன்ற உத்தியோகத்தர்களின் உள நல மேம்படுத்தலுக்கான செயற்பாட்டு நிகழ்ச்சி – 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களின் உள நலனை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூராட்சிமன்ற சேவைகளினை வினைத்திறனுடன் மக்களுக்கு வழங்கமுடியும்.
பிராந்திய உள்ளூராட்சி உதவிஆணையாளா் திரு.ச.யசிந்தன் அவா்களின் தலைமையில் 04.04.2024 அன்று மு.மல்லாவி மத்திய கல்லூாி(தேசிய பாடசாலை) விளையாட்டு மைதானத்தில் முல்லைத்தீவு மாவட்ட உள்ள
1.மாந்தை கிழக்கு பிரதேச சபை
2.துணுக்காய் பிரதேச சபை
3.புதுக்குடியிருப்பு பிரதேச சபை
4.கரதுரைப்பற்று பிரதேச சபை
5.பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் (முல்லைத்தீவு மாவட்டம்)ஆகியவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்,பணியாளர்களுக்கு
உள நல மேம்படுத்தலுக்கான நிகழ்வுகள் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்ச்சியில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளா், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற செயலாளா்கள், ஆயுா்வேத மருத்துவ உத்தியோகத்தா்கள், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சிமன்ற உத்தியோகத்தா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டிருந்தனா்.
துடுப்பாட்டம், வலைப்பந்து, கயிறு இழுத்தல்,100M அஞ்சல் ஓட்டம்,தேசிக்காய் கரண்டி, கைகளி னால் நீர் நிரப்புதல், மா ஊதி காசு எடுத்தல் என பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன. இவ் விளையாட்டுக்களில் உத்தியோகத்தர்கள்,பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர்
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *