கரும்புள்ளியான் மல்லாவி இணைப்பு வீதி வேலையில் சபை வாகனங்கள் பயன்படுத்தல் (22.04.2024)

மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் 2024 ஆண்டின் 1ஆம் காலாண்டுக்கான ஒருங்கினணப்பு குழுக்கூட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் 15.02.2024 திகதி 12.00 பி.ப மணிக்கு முல்லைத்தீீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ இராஜாங்க அமைச்சர் K.காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச ஒருங்கினணப்பு குழுக்கூட்டத்தில் முன்ழொழியப்பட்ட
“கரும்புள்ளியான் மல்லாவி இணைப்பு வீதி கிரவல் வீதியாக புனரமைப்பு செய்தல்” என்ற தீர்வுமானத்திற்கு அமைய நீர்பாசன திணைக்களத்தினால் கிரவல் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு எமது சபையின் கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு கரும்புள்ளியான் மல்லாவி இணைப்பு வீதி புனரமைக்கப்படுகின்றன.
22.04.2024 பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *