உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாந்தை கிழக்கு பிரதேச சபையால் மரநடுகை செயற்பாடு முன்னெடுப்பு

உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜுன் 06 திகதி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் கொண்டாடப்படுகின்றது.
இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வகையில் எமது பிரதேச சுற்றுச்சூழலை பசுமையாகவும் செழிப்பாகவும் வைப்பதன் மூலம் எமது மக்களின் ஆரோக்கியத்தை பேணும் நோக்கில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 30.05.2024 திகதி தொடக்கம் 05.06.2024 திகதி வரை எமது சபை செயலாளர் திருமதி . பா.சிவதர்சினி அவர்களின் நல் வழிகாட்டலின் கீழ்
எமது பிரதேசத்தில் மரநடுகை செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *