செல்வபுரத்தையும் சிவபுரத்தையும் இணைக்கும் குத்துப்பாலம் புணரமைப்பு பணிகள் 13.06.2024

எமது செல்வபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ள குத்துப்பாலம் சிவபுரம் மற்றும் செல்வபுரத்தை இணைக்கும் பாலமாக காணப்படுவதுடன் மக்களின் போக்குவரத்து மேற்கொள்வதற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
குத்துப்பாலம் குறித்த சில நாட்களாக இயற்கை அனர்த்தங்களால் பாதிப்படைந்த நிலையில் மக்கள் பாதுகாப்பான போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.
எமது பிரதேச மக்களின் நலன்கருதி எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் தலைமையிலும் நல் வழிகாட்டலிலும் எமது சபை கனரக வாகனங்களைப் பயன்படுத்தி எமது சபை ஊழியர்களினால் மக்களின் பங்களிப்புடன் மக்கள் பாதுகாப்பான போக்குவரத்து மேற்கொள்ளும் நோக்கில் 13.06.2024 இன்று செல்வபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ள குத்துப்பாலம் புணரமைப்பு செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *