எமது பிரதேச மக்களின் ஆரோக்கியத்தை பேணும் நோக்கில் சிவபுரம் சிவன்கோயில் பொதுக்கிணறு துப்பரவு செய்யப்பட்டது

எமது பிரதேசத்தில் சிவபுரம் சிவன்கோயில் அமையப்பெற்றுள்ளது. இக்கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகளவு மக்கள் வருகை தந்து இறை தரிசனம் பெறுகின்றனர். சிவபுரம் சிவன்கோயில் 2024 ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதனால் ஆலயத்திற்கு வருகை தரும் மக்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் நோக்கில் குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்ய மக்களின் கோரிக்கைக்கு அமைய எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் வழிகாட்டலின் கீழ் எமது சபை ஊழியர்களினால் சிவபுரம் சிவன் கோயில் பொதுக்கிணறு 01.07.2024 ஆம் திகதி துப்பரவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *