மக்கள் தாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து தமது கிராமத்தின் கல்வி, கலை, கலாச்சாரம்,விளையாட்டு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் வர்ச்சியினை மேற்கொண்டு அவற்றினூடாக தமது கிராமத்தின் அபிவிருத்தியினை முன்னெடுத்துச் செல்லும் ஒரு சிறிய அமைப்பே சன சமூகம் நிலையம் ஆகும்.
எமது மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 15 கிராமங்கள் அமையப் பெற்றுள்ளன. இங்கு 19 சன சமூக நிலை அமைப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று வன்னிவிளாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள வன்னிவிளாங்குளம் சன சமூக நிலையம் ஆகும்.
2024ஆம் ஆண்டு உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிதிட்டத்தின்(Local Development Support Project) மூலம் வன்னிவிளாங்குளம் மக்களின் கல்வி, கலை, கலாச்சாரம்,விளையாட்டு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் வர்ச்சியினை மேற்கொள்ளும் வன்னிவிளாங்குளம் சன சமூக நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு எமது சபை செயலாளரின் நல் வழிகாட்டலின் கீழ் திட்டமிடப்பட்டு கேள்வி கோரல் முறை மூலம் ஒப்பந்ததாரர்கள் தெரிவுசெய்யப்பட்டு 04.07.2024 ஆம் திகதி முதல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 14.08.2024 ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டது.







