எமது பிரதேச மக்களின் ஆரோக்கியத்தை பேணும் நோக்கில் எமது சபையால் வழங்கப்படுகின்ற சுகாதார சேவைகளில் ஒன்றாக ஆயுர்வேத மருத்துவ சேவையும் காணப்படுகின்றது.
இவ் மருத்துவ சேவை இலவசமாக எமது 15 கிராம சேவை பிரிவு மக்களுக்கும் அலுவலக நாட்கள் மு.ப 8.30 – பி.ப 4.15 வரை Dr.R.Kajanth அவர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன.
எமது பிரதேச மக்களின் போக்குவரத்து கடினம்,நேரவிரயமின்மையை தவிர்க்கும் நோக்குடன் எமது சபைச்செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் தலமையிலும் வழிகாட்டலிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆயுர்வேத மருத்துவ சேவை நடமாடும் சேவையாக காலை 8.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை எமது மக்களுக்கு வழங்கப்படுகின்றது.
07.03.2025 திகதி விநாயகபுர வட்டார மக்களுக்கு Dr.R.Kajanth அவர்களினால் எமது விநாயகபுரம் பொது நூலகத்தில் காலை 8.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இலவச ஆயுர்வேத மருத்துவ சேவை வழங்கப்பட்டது.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
பாண்டியகுளம் நட்டாங்கண்டல்
