வருடாந்த ஒன்றுகூடலும் நிகழ்வும் பிரிவுபசார விழாவும் 2024

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஊழியர் நலன்புரிச்சங்கத்தினால் திரு.சி.குருநீலன் அவர்களின் தலைமையில் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் பிரிவுபசார விழாவும்
13.03.2025 ஆம் திகதி (வியாழக்கிழமை)
காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி
இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளரும் ஊழியர் நலன்புரித் சங்கத்தின் போசகருமான திருமதி.பா.சிவதர்சினி அவர்களும் சிறப்பு விருந்தினராக கரைச்சி பிரதேச சபை செயலாளர் திரு.செ.செல்வக்குமார் அவர்களும் முல்லைத்தீவு பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனை பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு.தே.கொலின்ஸ் ரூபன் அவர்களும் துணுக்காய் பிரதேச சபை செயலாளர் திரு.மா.மகாதேவன் அவர்களும் மாந்தை கிழக்கு பிரதேச சபை ஆயுள்வேத வைத்தியசாலையின் Dr.R.Kajanth அவர்களும் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் எமது சபைக்கு பெரும் பணியாற்றிய எமது சபை முன்னைய செயலாளர் திரு.செல்வக்குமார் மற்றும் பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு.தே.கொலின்ஸ்ரூபன் அவர்களினதும் சேவைகள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து மதிய போசனமும் கலை நிகழ்வுடன் விழா நிறைவுபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *