சூழல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் ஜீன் 05 ஆம் திகதி உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தினால் 2025 உலக சுற்றாடல் தினம் “Ending Plastic Pollution” ( பிளாஸ்டிக் பாவனையால் உருவாகும் சூழல் மாசடைதலை முடிவுக்குக் கொண்டுவருதல்) எனும் உலகலாவிய தொனிப்பொருளின் கீழ்
சுற்றாடலை தூய்மைப்படுத்தி
மக்களுக்கு ஆரோக்கியமான சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் பாலிநகர் வட்டாரத்தில் அமையப்பெற்ற பாலி நகர் பொதுச் சந்தையும் அதன் வளாகமும் 03.06.2025 திகதி எமது செயலாளரின் தலைமையில் எமது சபை ஊழியர்களினாலும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் மற்றும் பாலி நகர் கிராமசேவகர் பிரிவு மக்களினது ஒத்துழைப்புடன் இணைந்தும் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.













