எமது பிரதேச சபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக திருமதி.சுகிர்தா அவர்கள் கடமையை பொறுப்பேற்று கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மிகுந்த அர்ப்பணிப்புடன் எமது பிரதேச மக்களுக்கு சிறப்பாக அளப்பெரும் பணியாற்றியுள்ளார்.
இன்றுடன் எமது பிரதேச சபை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.சுகிர்தா அவர்கள் வருடாந்த இடமாற்றம் பெற்று வேறு திணைக்களத்துக்கு மக்கள் பணி மேற்கொள்ளவதற்கு செல்கின்றார். எமது பிரதேச சபைக்கும் பிரதேச மக்களுக்கும் எமது முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.சுகிர்தா அவர்கள் வழங்கிய அளப்பெரும் சேவைக்கு நன்றி தெரிவிப்பதோடு மேலும் அவர் பதவி உயர்வு பெற்று மக்கள்
பணியை சிறப்பாக வழங்குவதற்கு மனம்நிறைந்த வாழ்த்துக்களையும் எமது சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தெரிவித்துகொள்கின்றோம்.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்












