பொது நூலகம்
எம்மால் வழங்கப்படுகின்ற சேவைகளில் ஒன்றாக நூலக சேவையும் காணப்படுகின்றது.
நிலத்தடியில் எந்த அளவிற்கு ஊற்று தோண்டுகிறமோ அந்த அளவிற்கு ஊற்றில் நீர் அதிகமாக காணப்படும். அது போல எந்த அளவிற்கு நாம் கல்வி கற்கின்றமோ நம்முடைய அறிவை அதிகரித்து கொள்ள முடியும்.நமது அறிவுத்திறனை அளிக்கக்கூடிய நூல்கள் இருக்கும் இடத்தை தான் நூலகம் என்று சிறப்பித்து கூறுகிறோம்.
எம்மால் அரசு பொது நூலகங்கள், சிறுவர்க்குரிய நூலகங்கள், நடமாடும் நூலகங்கள்,இணைய வழி நூலகங்கள் என்று பல பரிமாணங்களில் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கு நூலக சேவைகளை வழங்குகின்றது. எமது நூலகங்களில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கல்வி, பொருளியல், மருத்துவம், வரலாறு, ஆன்மிகம், உளவியல், பொறியியல் போன்ற துறை சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன.மேலும், நாளேடுகள், பருவ இதழ்கள் போன்றவையும் காணப்படுகின்றன.
எமது மாணவர்கள் பாட அறிவோடு பின்தங்கிவிடாமல் உலக அறிவை வளர்த்துக் கொள்ளலாம். பல்வேறு துறை சார்ந்த தகவல்களை நூல்கள் மூலம் எளிதில் பெற்றுவிடலாம். பல்வேறு நூல்களைப் படித்துப் படைப்பாளராகவோ, பேச்சாளராகவோ மாறித் தனித்திறன்களை மெருகேற்றிக் கொள்ளலாம். ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழித்திடலாம்.
இந்த வகையில் எமது சபையினால் எமது மக்களின்,மாணவர்களின் அறிவினை வளர்க்க 3 நூலகங்கள் அமைக்கப்பட்டு நூலக சேவைகள் வழங்கப்படுகிறது.
1.மாந்தை கிழக்கு பிரதேச சபை பொது நூலகம் – பாண்டியன்குளம்
2.மாந்தை கிழக்கு பிரதேச சபை பொது நூலகம் – பாலிநகர்
3.மாந்தை கிழக்கு பிரதேச சபை பொது நூலகம் – விநாயகபுரம்
பேரறிஞர் அண்ணா
” வீட்டிற்கு ஒரு புத்தகச்சாலை அமைத்திடுதல் வேண்டும். அறியாமை என்னும் இருள் அகல நூலகங்களை நாம் தவறாமல் பயன்படுத்துதல் வேண்டும்.”


