மைதானம் புனரமைப்பு

எமது சபைக்குச் சொந்தமானதும் வன்னிவிளான்குளம் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளதுமான பொது விளையாட்டு மைதானமானது, மக்களின் கோரிக்கைக்கு இணங்க புனரமைப்புச் செய்யப்பட்டது. சபைக்குச் சொந்தமான கனரக வாகனங்களுடன், மக்கள் பங்களிப்பையும் பெற்று குறித்த மைதானம் புனரமைப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆதனவரி அறவிடுவதற்கு நடவடிக்கைகள்

எமது சபையின் செயலாளர் திரு.செ.செல்வகுமார் அவர்களின் தலைமையின் கீழ் எமது பிரதேசத்தில் ஆதனவரி அறவிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ஆதனவரி அறவிடுவதை அடுத்த நிலைக்கு முன்னெடுத்துச்செல்லும் நோக்கில் வவுனியா விலை மதிப்பீட்டு திணைக்களத்தில் 06.02.2024 கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

ஆதனவரி அறவீட்டிற்கான ஆரம்பகட்டச் செயற்பாடு

எமது சபை செயலாளர் திரு.செ.செல்வகுமார் அவர்களின் தலைமையில் எமது சபையின் கீழுள்ள பிரதேசத்தில் ஆதனவரி அறவிடுவதற்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் எமது சபை உத்தியோகத்தர்களுக்கு 09.01.2024 காலை 10.00 மணிக்கு செயலமர்வு வழங்கப்பட்டது.